• Sep 20 2024

புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை அதுல்யா ரவி...கொந்தளிக்கும் ரசிகர்கள்...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பால்வாடி காதல் என்னும் தமிழ் குறும்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை அதுல்யா ரவி. இதன் மூலம், காதல் கண் கட்டுதே என்னும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பை பெற்றார். பின்னர், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கதாநாயகன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.



ஏமாளி என்னும் திரைப்படத்தில் செம கவர்ச்சியான ரோலில் நடித்த இவர், அப்போது இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது.. நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, ஏன் பெயர் ஆனந்தன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.



அதன் பிறகு சந்தனு ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் இளசுகளை கவரும் கதையில் நடித்திருந்தார். எனினும் தற்போது, எண்ணித் துணிக, வட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வரும் அதுல்யா ரவி, தற்போது தனது போட்டோஸ் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.



இந்நிலையில், நடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் ரசிகர்கள் பலரும், நடிகை அதுல்யா ரவியின் முகம் முன்பு போல் இயற்கையாக இல்லை.



உங்களை முன்னாடிலாம் ரொம்ப புடிக்கும்.இப்போதெல்லாம் என்ன எழவோ இப்படி ஒரு கேவலமான முக பாவனைகளை இப்போதா வெறுத்து போய் பார்க்குறேன்.. என கெமண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.





Advertisement

Advertisement