• Sep 20 2024

5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை பாவனா- உற்சாகப்படுத்திய ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பாவனா. இதையடுத்து வெய்யில் படத்தில் பரத்துடன் நடித்தார். இந்தத் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து தீபாவளி படத்தில் நடிகை பாவனா நடித்த "சுசி" என்ற கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பு பெற்றது இதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக குவிந்தன.

இவர் மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்த வந்த இவர் இறுதியாக கடந்த 2017-ல் வெளியான ஆதம் ஜாண் படத்தில் நடிகர் பிருத்விராஜுடன் நடித்திருந்தார்.

அதன் பிறகு கன்னட படங்களில் நடித்து வந்தார். பின்னர் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக சினிமாவிலிருந்து விலகினார் இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு அறிமுக இயக்குநர் மைமூநாத் அஷ்ரப் இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் ஷராபுதீன்,அனார்கலி நாசர்,அர்ஜுன் அசோகன், செபின் பென்ஷன் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ள கொடுங்கல்லூரில் நேற்று தொடங்கியது. படப்பிடிப்புக்கு வந்த பாவனாவை படக்குழுவினர் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர் இதுதவிர மலையாள திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement