• Sep 21 2024

43 வயதிலும் ரசிகர்களை கிறங்கடித்த நடிகை பூமிகா-லேட்டஸ்ட் புகைப்படம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ரோஜா கூட்டம் படத்தில் வரும் ‘ஆப்பிள் பெண்ணே நீ யாரோ’ என்ற பாடலின் மூலம் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிக் கொண்டவர் நடிகை தான் பூமிகா.

மேலும் இந்தப் படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து ‘பத்ரி’ திரைப்படத்தில் இயல்பான நடிப்பினை காட்டி ரசிகர்களிடம் தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார். அதன் பின் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வந்த பூமிகா ஒரு கட்டத்தில் திரையுலகில் இருந்து காணாமல் போய்விட்டார்.

இதன் பின்னர் திடீரென்று சூர்யாவுடன் இணைந்து ‘ஜில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். அதன் பிறகு தொடர்ந்து இவரின் படங்கள் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் தமிழில் சினிமாவில் பூமிகாவிற்கு பட வாய்ப்பு குறைந்துள்ளதால் தெலுங்கு திரையுலகிற்கு சென்று விட்டார். எனினும் அதையடுத்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்பு தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். மீண்டும் தமிழில் சமந்தாவின் “யு டர்ன்” திரைப்படத்தில் நடித்திருந்தார்.

எனினும் தற்போது, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகின்ற “கண்ணை நம்பாதே” திரைப்படத்தில் பூமிகா ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் 43 வயதை எட்டியுள்ள பூமிகா தற்போதும் தனது உடலை மிகவும் ஃபிட்டாக வைத்திருக்கிறார். அத்தோடு சமீபத்தில் அவர் கருப்பு நிற ஆடையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement