• Sep 20 2024

ஓட்ட பயிற்சிக்கு பின்னர் ரோட்டுக் கடையில் இட்லி உண்ட தனுஷ் பட நடிகை- இன்னைக்கு ஒரு புடி..அடிபொலி

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் அவுட் ஆப் சிலபஸ் என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை பார்வதி, இதனைத் தொடர்ந்து தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான பூ திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். 

இதனை அடுத்து தமிழில் தனுஷ் நடித்த மரியான், கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சனியும் சில பெண்களும் ஆகியவை இவரது முக்கிய திரைப்படங்கள் ஆகும்.


தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்'படத்தில் நடித்து வருகிறார்.அதே போல அஞ்சலி மேனன் இயக்கிய வொண்டர் வுமன், சோனிலிவ் தளத்தில் நேரடியாக டிஜிட்டல் பிரீமியர் முறையில் நேற்று நவ.18 முதல் ஒளிபரப்பாகிறது.


இப்படத்தில் நடிகைகள் நதியா, நித்யா மேனன், பார்வதி திருவொத்து, பத்மப்ரியா உள்ளிட்டோர்  நடித்துள்ளனர். ரோனி ஸ்க்ரூவாலா & ஆஷி துவா சாரா இப்படத்தை தயாரித்துள்ளனர்.


இந்நிலையில் நடிகை பார்வதி திருவொத்து, கேரளாவில் உள்ள கொச்சி நகரில் பிரசித்தி பெற்ற உணவகமான மைசூர் ராமன் இட்லி கடையில் பொடி இட்லியின் விதவிதமான உணவு வகைகளை சுவைத்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு, காலை ஓட்ட பயிற்சிக்கு பின்னர் நெய் பொடி இட்லி மற்றும் வெண்ணெய் பொடி இட்லி & தோசை உண்டதாக பதிவிட்டுள்ளார்.இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement