• Sep 20 2024

நடிகை ஜெனிலியாவிற்கு இப்படியொரு மகனா..அவரே வெளியிட்ட சூப்பர் பதிவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

குறும்புத்தனம் நிறைந்த தனது நடிப்பினாலும், அழகினாலும் தமிழ் சினிமாவையே கட்டிப் போட்ட ஒருவரே நடிகை ஜெனிலியா. சிறந்த மாடலாக விளங்கிய இவர் தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து சினிமாவில் பிரபலமானார். 

நடிப்பு வாழ்க்கையில் இவரது பயணம் 2003 இல் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்ற படமான 'துஜே மேரி கசம்' மூலம் தொடங்கினார்.அதுமட்டுமல்லாது அதே ஆண்டு 'பாய்ஸ்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். இவ்வாறு தமிழ் சினிமாவில் கால் பதித்த இவர் 2003-2012 காலகட்டத்தில் பல தெலுங்குப் படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.


இவ்வாறாக பல படங்களில் நடித்து வந்த ஜெனிலியா பல விருதுகளையும் வென்றிருக்கின்றார். அதிலும் குறிப்பாக 2006-ஆம் ஆண்டு 'பொம்மரிலு' என்ற தெலுங்கு காதல் கதைக்களத்தை கொண்ட படத்தில் நடித்ததற்காக ஜெனிலியா தனது முதலாவது பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

தன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திருமண வாழ்க்கையில் இணைந்து கொண்ட ஜெனிலியா சிறிது காலம் படங்களில் நடிப்பதிலிருந்து விலகி இருந்தார். எனினும் இவர் மீண்டும் தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்கும் 'டாலி கி டோலி' என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கை என பிஸியாக இருக்கும் நடிகை ஜெனிலியா அவ்வப்போது சமூக வளைத்தளங்களில் தன்னைப் பற்றிய செய்திகளைப் பகிரும் வழக்கம் கொண்டவர். 


இந்நிலையில் இவருக்கு 2 மகன்களும் உள்ளனர்.இவ்வாறுஇருக்கையில் தனது மகனின் புகைப்படத்தை இட்டு ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.அதில் “என் அன்பான குழந்தை,என்னுடையதாக இருப்பதற்கு நன்றி💚உனக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று தினமும் காலையில் எழுந்திருக்கிறேன், உன்னால் என் நாள் முழுமையடைந்தது என்று நம்பி ஒவ்வொரு இரவும் தூங்குகிறேன்.எனது ஒவ்வொரு எண்ணத்தையும் வைத்திருந்ததற்கு நன்றி, ஆண் குழந்தை பிறக்கும் போது எனக்கு வேறு வழியில்லை.” என தெரிவித்துள்ளார்.


இதைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு இந்த பெரிய மகனா என வாயடைத்துப்போயுள்ளதோடு அதற்கு லைக்ஸ்களையும் இட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement