• Sep 20 2024

கோடிக்கு ஆசைப்பட்டு நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் செய்த செயல்-திட்டித்தீர்க்கும் தயாரிப்பாளர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ராஜேஷ்  ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக 'அசத்தப்போவது யாரு' என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர். பின்னர் 'மானாட மயிலாட' எனும் ரியாலிட்டி ஷோவில் இவர் வழங்கிய அற்புதமான நடனத்தின் மூலம் வெற்றி பெற்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'அட்டகத்தி' படம் இவருக்கு சிறந்த வாய்ப்பை கொடுக்க இப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் அமுதமாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்திற்கு பின்னர் இவர் நடித்த 'காக்கா முட்டை' திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதினை வென்றார்.

இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது. அந்தவகையில்  தர்மதுரை, வடசென்னை, கனா உள்ளிட்ட பல படங்கள் ஐஸ்வர்யா நடிப்பில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.



எனினும் தற்போது டிரைவர் ஜமுனா, மோகன் தாஸ், தி கிரேட் இந்தியன் கிட்சன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படியிருக்கையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மீது தயாரிப்பாளர்கள் கடும்கோபத்தில் இருக்கிறார்கள்.

மேலும் இப்படங்கள் வெளியாகாமல் இருக்கும் நிலையில், ஒரு படத்திற்காக 1.5 கோடி அளவில் சம்பளம் உயர்த்தி கேட்டு வருகிறாராம். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தோழிகளுடன் பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார்.



Advertisement

Advertisement