• Sep 19 2024

முகமது நபி குறித்து அவதூறாக பேசியவருக்கு ஆதரவு தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தலைவி படத்தின் மூலம் பிரபல்யமானதோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் லாக் அப் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த நிலையில் அண்மையில் புதுடெல்லி பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர்களாக இருந்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் முகமது நபி குறித்து அவதூறாக கருத்து கூறியதாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து இருவரும் பா.ஜ.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

மேலும் எந்தவொரு மதத்தின் தலைவர் குறித்தும் அவதூறாக பேசக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகை கங்கனா ரனாவத் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார்.

அதில் நுபுர் சர்மா அவர் கருத்துகளை சொல்ல உரிமை இருக்கிறது. அவருக்கு எத்தனை மிரட்டல்கள் வருகின்றன என்பதை நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நீங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால் நீதிமன்றம் செல்லுங்கள். இந்துக் கடவுள்கள் அவமதிக்கப்படுவதற்காக நாங்கள் அன்றாடம் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம்.

நீங்களும் அதையே செய்யுங்கள். அதைவிடுத்து டான் ஆக முயற்சிக்காதீர்கள். இது ஒன்றும் ஆப்கானிஸ்தான் இல்லை. இங்கே, சீராக இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது. அதை மறந்துவிட்டு பேசுபவர்களுக்கு இப்போது நினைவுபடுத்துகிறேன்" என்று கூறி நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement