தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் ரஜினி கமல் பிரபு ஆகிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். இவர் பிரபல இயக்குநரான சுந்தர். சி யைத் திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இருப்பினும் அவர்கள் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை என்பதும் முக்கியமாகும். அத்தோடு குஷ்பு கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
அந்த வகையில் தற்பொழுது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். நடிப்பைத் தவிர அரசியலிலும் ஈடுபட்டு வரும் இவர் பாஜக நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்தியவில் நடக்கவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை குஷ்பு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவாவில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற வுள்ள இந்த சர்வதேச திரைப்பட விழாவை நடத்த ஒரு வழிகாட்டல் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அதில், தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தலைவராகவும், கோவா மா நில முதல்வர் இணை தலைவராகவும் இருப்பார்.
இவர்களுடன் இணைந்து சினிமா கலைஞர்கள் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த சினிமா உறுப்பினர்களின் பட்டியலில்,இயக்குநர் கரன் ஜோகர், நடிகை குஷ்பு, உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- கெரியரில் ஏற்பட்ட திடீர் சறுக்கல்- ஒரு மாதத்திற்கு முடிவினை மாற்றிக் கொண்ட நடிகை பூஜா ஹெக்டே
- 48 வயதில் இத்தனை அழகா- பொன்னியின் செல்வன் டீசரை ஐஸ்வர்யாவுக்காக ரிப்பீட் மோடில் பார்த்து வரும் ரசிகர்கள்
- குக்வித் கோமாளி ஷோவில் கலந்து கொண்ட மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் நடுவர்- இன்னும் யாரெல்லாம் வந்திருக்கிறாங்க தெரியுமா?
- AK61 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியாகிய புகைப்படம்- அஜித் இல்லாமல் படப்பிடிப்பு நடை பெறுகின்றதா?
- மகேஷ்பாபுவின் 28 வது படம் குறித்து வெளியாகிய புதிய அப்டேட்- அதிரடி கூட்டணியாக இருக்கே
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!