கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்பவர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானார்.மேலும், ரஜினி, கமல், சரத்குமார், பிரபு போன்ற பல நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர்
இவர் நடிப்பை தாண்டி மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். இவர் சினிமாவின் உச்சத்துக்கு சென்றாலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு இருக்கிறார். கொரோனவின் போது கூட பல ஏழை மக்களுக்கு உணவளித்தார். தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பாரி வள்ளலை போல் வாரி வழங்கியவர் விஜயகாந்த்.
மேலும், நடிகர் விஜயகாந்தை தன் குடும்பத்தில் ஒருவராக பல பேர் நினைக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் மீசை ராஜேந்திரன். இந்நிலையில் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் விஜயகாந்துடைய கொடை உள்ளம் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் அவர், பல நடிகர்களின் கண்ணீரை துடைத்து துயர் போக்கியவர் விஜயகாந்த். தமிழ் சினிமாவின் பாடகியும், நடிகையுமான குஞ்சரம்மாள் இறந்தபோது அவருடைய இறுதி சடங்கு கூட காசு இல்லாமல் அவர்கள் குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது குஞ்சரம்மாளின் குடும்பத்தினர் விஜயகாந்தை சந்தித்து பேசி இருந்தார்கள். அப்போது அவர் என்னை அழைத்து இது போல் நடிகை குஞ்சரம்மாள் இறந்து விட்டார். இந்த பத்தாயிரம் பணத்தை யாருக்கும் தெரியாமல் குஞ்சரம்மாள் மகளிடம் நான் கொடுத்ததாக கூறி அவர்களிடம் தந்து விட்டு வா என்று என்னை அனுப்பினார். இப்படி பல பேருக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை விஜயகாந்த் செய்திருக்கிறார். நடிகர் சங்க கட்டடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை ஏன் வைக்க வேண்டும் என்று சொன்னேன் என்றால் அந்த கட்டிடம் இருக்கும் இடத்தை மீட்டதே விஜயகாந்த் தான். அதற்காக தான் அவருடைய பெயரை வைக்க சொன்னேன் என்று உணர்ச்சி பொங்க பேசியிருந்தார்.
Listen News!