• Sep 20 2024

தேசியக் கொடியை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பறக்க விட்டு வாழ்த்துக் கூறிய நடிகை மீனா

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் நடிகை மீனா.ரஜினி, கமல் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர்கள் அனைவருடனும் நடித்து முடித்துள்ள இவர் தற்பொழுது அண்ணி, அக்கா உள்ளிட்ட கேரக்டர் ரோல்களில் நடித்து வருகின்றார்.

 சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தில் ரஜினியின் மாமன் மகளாக நடித்திருந்தார். இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதே வித்யாசாகர் என்ற ஐடி புரொபஷனலை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனதோடு இவருக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீனாவின்  கணவர், மல்டி ஆர்கன் செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார்.இவரது இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது இரங்கல்களைத் தெரிவித்திருந்தனர்.அத்தோடு இதனால் சிலகாலம் மீனா வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய் இருந்தார்.


இந்நிலையில் இன்றைய தினம் நாட்டில் 76வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் அனைவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான வந்தே மாதரம் பாடலுடன் தேசியக் கொடியை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பறக்க விட்டுள்ளார்.

மீனாவின் இந்த மனமாற்றம் அவரது ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தி வருகிறது. காலம் கண்டிப்பாக அவரது வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை விரைவில் கொண்டு வரும் என்று கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement