2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தான் மீரா ஜஸ்மீன்.இவர் மாதவன் நடிப்பில் வெளியாகியிருந்த ரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தார்.இதனைத் தொடர்ந்து புதிய கீதை, ஆஞ்சனேயா, சண்டைக் கோழி போன்ற படங்களில் நடித்திருக்கின்றார்.
இதில் சண்டைக் கோழி திரைப்படம் இவரை சிறந்த நடிகையாக அறிமுகப்படுத்தியது.இதனால் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலும் படவாய்ப்பினைப் பெற்று நடித்து வந்தார்.
இந்த நிலையில் இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்பு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய அக்கவுண்ட் ஒன்றை தொடங்கினார்.
தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.இந்த நிலையில் தற்பொழுது ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.ஓணம் புடவையில் ட்ரெடிஷ்னல் லுக்கில் செம்ம அழகாக இருக்கிறார் மீரா ஜாஸ்மின் என ரசிகர்கள் கூறி வருவதையும் காணலாம்.
Listen News!