நடிகை நமீதா இந்திய திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர். அதுமட்டுமல்லாமல் நமீதா 1998-ம் ஆண்டு சுரத் நகரின் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் இவர் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
மேலும் இவர், தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நடிகை நமீதா 17 வயதில் மாடல் உலகில் நுழைந்த பின்னர் திரைத்துறையில் புகுந்து கவர்ச்சியின் மூலம் உச்சத்துக்கு சென்றார்.
மேலும் 'சொந்தம்' எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை நமீதா. அதன்பிறகு ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ராணி,என பல தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
நமீதா. அதன்பிறகு தமிழில் ஏய், சாணக்யா, ஆணை, இங்கிலீஷ்காரன், போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். அதுமட்டுமல்லாமல் எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை நமீதா தனது கணவர் வீரேந்திர சவுத்திரியுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வரும் போது ரசிகர்கள் இவரை சூழ்ந்து செல்பீ எடுத்துக்கொண்டனர். நமீதா நிருபர்களிடம் கூறும்போது, ''திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனது குழந்தைகள் நலமாக உள்ளனர். கடவுளுக்கு நன்றி சொல்லவே வந்தேன் என கூறியுள்ளார்.
மேலும் எனக்கு சினிமாவில் நடிப்பதைவிட அரசியலில் ஈடுபடவே அதிக ஆர்வம் இருக்கிறது. விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்" என்று கூறிஉள்ளார் நடிகை நமீதா.
Listen News!