நடிகை நயன்தாரா பளபளக்கும் தங்க - வைர நகைகளுடன் மகாராணி போன்ற தோரணையில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சுமார் 19 வருடங்களாக திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நிலைத்து நிற்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அத்தோடு காரணம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு தங்களை நடிகைகள் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி, பல்வேறு சர்ச்சை மற்றும் சவால்களை கலந்து சாதித்தவர் தான் நடிகை நயன்தாரா.
கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற மாபெரும் அந்தஸ்தை தன்வசமாகியுள்ள நயன்தாரா.எனனும் சமீப காலமாகவே திரையுலகில் பேரிடியை சந்தித்து வருகிறார். இவர் கதையின் நாயகியாக நடித்த. O2 , மற்றும் கனெக்ட் ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறாமல் தோல்வியை தழுவியது.
மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், ஒரு சில காரணங்களால் அந்த படங்களில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது.
எனினும் தற்போது நயன்தாராவின் கை வசம், நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வரும் 'ஜவான்' , தனி ஒருவன் படத்திற்கு பின்னர் மீண்டும் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்கும் 'இறைவன்', மற்றும் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அதே போல், நயன்தாராவின் காதல் கணவர் விக்னேஷ் சிவன் அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் ஆன பின்னர் அஜித்தை வைத்து இயக்க காத்திருந்த நிலையில், அஜித் விக்கி கூறிய கதை பிடிக்கவில்லை என கூறி, இப்படத்தி இருந்து விக்கியை தூக்கி எறிந்துவிட்டு, மகிழ் திருமேனியை இயக்குநராக ஒப்பந்தம் செய்தார்.
அத்தோடு நயன் தன்னுடைய கணவருக்கு உறுதுணையாக அவர் இயக்க இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்க உள்ள படத்தில் மிகவும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது வரை இப்படம் குறித்து எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாக வில்லை.
அத்தோடு இது ஒருபுறம் இருக்க நயன்தாரா கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வைர நகைகள் அணிந்து, பேரழகு பொருந்திய மகாராணி போல் ஜொலிக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அத்தோடு இந்த புகைப்படங்கள் நகை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Listen News!