• Sep 20 2024

புதிய வீடு கட்டும் நடிகை நீலிமா ராணி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நீலிமா ராணி.

ஆம், வெள்ளித்திரையில் நான் மகன் அல்ல, பாண்டவர் பூமி, பண்ணையாரும் பத்மினியும், மன்னர் வகையறா உள்ளிட்ட பல திரைப்படங்கள் நடித்து அசத்தி இருந்தார்.

அதே போல், சின்னத்திரையில் ஒளிபரப்பான செல்லமே, வாணி ராணி, அரண்மனை கிளி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். அத்தோடு நடிகை நீலிமா ராணி, இசை வாணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.


திருமணத்திற்கு பின்னர் நடித்து வந்த நீலிமா திடீரென ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக இனி நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.


இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் நீலிமா ராணி தனது குடும்பத்துடன் இணைந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவுவிடுவார்.



இவ்வாறுஇருக்கையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார். ஆம், தனது சொந்த ஊரில் தங்களது சொந்த வீட்டை காட்டுகிறோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.




பூஜையில் எடுத்த புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 


Advertisement

Advertisement