இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தில் நித்யா மேனன் ராசி கண்ணா ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.
மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகிய இப்படம் ரசிகர்களின் ஏகோப்பித்த வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் பலர் பாராட்டி நிலையில் தற்போது பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்த படத்தை பார்த்து பாராட்டி உள்ளார் .திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகவும் அழகான படம் என்றும் அருமையான காதல் கதை என்றும் காதலின் வலிகளையும் மிக அருமையாக சொல்லி இருந்தது என்றும் கூறியுள்ளார் .
நித்யாமேனன் நடிப்பு மிகவும் அருமை என்றும் அவர் பல்லாயிரக்கணக்கான இதயங்களை வென்று விட்டார் என்றும் ஷங்கர் தனது டுவிட்டரில் கூறினார்.அத்தோடு மித்ரன் ஜவஹர் இயக்கம் மற்றும் தனுஷ்-அனிருத் ஆகியோர்களின் இணைப்பு ஆகியவை மிக பிரமாதமாக இருந்தது என்றும் இந்த படத்தில் நடித்து இந்த பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் உள்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.ஷங்கரின் பாராட்டுப் பெற்றதால் திருச்சிற்றம்பலம் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Listen News!