நடிகர் தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.இந்தப் படத்தில் ஷோபனா என்ற கேரக்டரில் தனுஷிற்கு பிரெண்டாக நடித்து அசத்தியிருந்தார் நித்யா மேனன்.இதற்கு ரசிகர்கள் பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து இருந்தனர்.
சமீபத்தில் கூட தன்னை தாய் கிழவி என்று கூப்பிட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார்.இவ்வாறு தென்னிந்திய சினிமாவில் இளைஞர்கள் பலரின் மனதைக் கொள்ளை கொண்டு அவர்களின் கனவு நாயகியாக வலம் வருபவர் நடிகை நித்யா மேனன்.
இந்நிலையில் மலையாளத்தில் தக்ஷினம் ஒரு பெண்குட்டி என்ற படபத்தில் நடித்து வரும் நித்யா மேனன் படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளரை சந்திக்க மறுத்த விசயம் தற்போது பிரச்சனையாகியுள்ளது. இதனால் நித்யா மேனன் திமிர் பிடித்தவர் .அவருக்கு நடிக்க தடை விதிக்க வேண்டுமென்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
எனினும் இதற்கு பதிலடி கொடுத்த நித்யா மேனன், நான் ஒன்றும் திமிர் பிடித்தவள் கிடையாது. அப்படிதான் சினிமாத்துறையில் நினைத்து வருகிறார்கள். சினிமாவில் எனக்கு பல எதிரிகள் இருக்கிறார்கள்.
மேலும் அவர்கள் விரும்பியதை நான் செய்யாதபோது என்னை பற்றி அவதூறு பொய்களை பரப்புகிறார்கள். எனது வளர்ச்சியை தடுத்து கீழே தள்ளப்பார்க்கிறார்கள். என்னுடன் நடித்த கலைஞர்கள் கூட என்னுடன் பணியாற்றுவது கடினம் என்று கூறியதும் இல்லை. என்னை பற்றி அவர்களுக்கு நன்றாக தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!