• Sep 21 2024

நடிகை ஓவியா லெஸ்பியன் girl- ஆ, அதனால் தான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையா?- அவரே அளித்த ஓபன் பேட்டி- இதை எதிர்பார்க்கலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

விமல் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்த களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாவர் தான் நடிகை ஓவியா.தொடந்து பல படங்களிலும் நடித்துள்ளார்.ஆனால் இவர் நடித்த படம் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்பினைத் தேடித்தரவில்லை.

இதனால் கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஆரவ்வை காதலித்து பிரச்சினை ஏற்பட்ட நிலையில், பிக்பாஸ் வீட்டில் தற்கொலை வரை சென்றார். ஆனால் இவருக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்தனர்.இருப்பினும் நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறினார்.


இந்த நிலையில் மீண்டும் இவர் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படியான நிலையில அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் ஓவியா இன்னும் திருமணம் முடிக்காமல் இருப்பதற்கு காரணம் ஓவியா ஒரு லெஸ்பியன் என்று சொல்லுறாங்களே இது உண்மையா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஓவியா, நடிக்கிறவங்க என்றாலே இப்பிடியாக பிரச்சினைகள் எல்லாம் வரும். அதையெல்லாம் கண்டுக்காமல் போய்டனும். நான் லெஸ்பியன் கிடையாது என்று கூறியுள்ளார். மேலும் நீங்க ஷுட்டிங்லய யாரையாவது அடிச்சிருக்கிறீங்களா என்று கேட்ட போது , நான் லைப்ல யாரையும் அடிச்சது  இல்லை. என்னை யாரும் ஹேட் பண்ணுற மாதிரி இருந்தால் அந்த இடத்தில இருக்க மாட்டேன். விலகிடுவேன். ஈசியா யாராலையும் என்னை ஹேட் பண்ணிட முடியாது அதுக்கு நான் சம்மதிக்கவும் மாட்டேன்.


பொய்யா பழகிறவங்க யார் என்று எனக்கு பார்த்தவுடனேயே தெரிஞ்சிடும் அதனாலேயே நான் நிறைய பேர் கூட எல்லாம் பழகிக் கொள்ள மாட்டேன். என்னுடன் உண்மையா இருக்கிறவங்களோட தான் நான் இருக்கிறேன்.மேலும் நிறைய பேருக்கு மற்றவங்களை ஹேட் பண்ணி பேசிற பழக்கம் இருக்கு அதை மாத்திக்கனும் என்றார்.


மேலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கா என்று கேட்ட போது, அப்பிடி ஒன்றும் எனக்கு கவலை இல்லை. எனக்கு கிடைக்கிற வாய்ப்புக்களையே பெரிதாகத் தான் நினைப்பேன். மற்றும் படி பெரிய ஆசைகள் எல்லாம் இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் சந்தோஷமாகத் தான் இருக்கிறேன் என்றார். தொடர்ந்த ஹீரோயின்களை பொது இடத்தில் தவறாகத் தொடுறவங்க நிறைய பேர் இருக்கிறாங்க அவங்களை அவங்க அம்மா அப்பா சரியாக வளர்க்கல என்று தான் கூற வேண்டும் என்று ஓபனாகப் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement