• Sep 20 2024

மகனின் பெயர் சூட்டு விழாவை மிகவும் பிரமாண்டமாகக் கொண்டாடிய நடிகை பூர்ணா- இவ்வளவு கியூட்டாக இருக்கிறாங்களே....

stella / 1 year ago

Advertisement

Listen News!

 இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான 'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு' என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூர்ணா.


முதல் படத்திலேயே, தன்னுடைய அழகால் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர், பார்ப்பதற்கு நடிகை அசின் போன்றே இருக்கிறார் என்றும், இவர் அசினின் சகோதரியா? என்று கூட இவர் நடிகையாக அறிமுகமான போது பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவியது.


தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார் பூர்ணா. சமீப காலமாக கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் பூர்ணா நடித்த காப்பான், தலைவி, போன்ற படங்களில் நடித்தது இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.


திரையுலகில் வாய்ப்பு குறைய துவங்கிய பின்னர், துபாயில் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை கடந்த ஆண்டு நடிகை பூர்ணா திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு அண்மையில் ஆண் குழந்தையும் பிறந்திருந்தது.


இந்நிலையில் பூர்ணா தன்னுடைய மகனுக்கு பெயர் சூட்டும் விழாவைக் கொண்டாடியுள்ளார். மகனுக்கு ஹம்டன் என்றும் பெயர் வைத்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.






Advertisement

Advertisement