கன்னட சினிமாவில் தனது இயல்பான நடிப்பினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த நடிகை தான் பிரணிதா. இவர் தமிழில் உதயன் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி என்னும் திரைப்படத்தில் நடித்தார்.இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சூர்யாவுடன் மாஸ் என்னும் திரைப்படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் இப்போது தமிழ் ஹிந்தி தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். கடந்த ஆண்டு நித்தின் ராஜூ என்பவரை திருமணம் செய்த பிரணிதா, தான் கர்ப்பமாக இருப்பதை தனது கணவரின் பிறந்தநாள் அன்று அறிவித்தார்.
தொடர்ந்து தனது கர்ப்பம் சம்பந்தமாக போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார் இந்நிலையில் தனது பேபி பம்ப்பை காட்டி போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
மேலும் அந்த போட்டோவுக்கு தாய்மைப் பயணத்தைத் தொடங்கும் வரை நம் அம்மாக்கள் நமக்காக எவ்வளவு தியாகம் செய்தார்கள் என்பதை நாம் உண்மையில் உணரவில்லை என கேப்ஷன் கொடுத்துள்ளார். இவரின் இந்தப் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருவதைக் காணலாம்.
Listen News!