• Sep 20 2024

மர்மமான முறையில் உயிரிழந்த மாணவிக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை ப்ரியா பவானி ஷங்கர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் பெண்ணான ப்ரியா பவானி சங்கர், செய்தி வாசிப்பாளராக தனது கெரியரை ஆரம்பித்தார்.அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார்.

தொடர்ந்து மேயாத மான் என்னும் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார்.இப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை படத்தில் நடித்திருந்தார்.

https://twitter.com/iamharishkalyan/status/1548636060598804481

இதனையடுத்து தற்போது, 'திருச்சிற்றம்பலம்', 'அகிலன்', 'பொம்மை', 'ருத்ரன்', 'பத்து தலை', 'இந்தியன் 2' மற்றும் 'குருதி ஆட்டம்' ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாணவி மரணத்தில் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தை கைது செய்யக்கோரி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://twitter.com/priya_Bshankar/status/1548911816742359040

உயிரிழந்த சிறுமிக்கு ஆதரவாக நடிகர் ஹரிஷ் கல்யாண் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது நடிகை ப்ரியா பவானி சங்கரும் தனது ட்விட்டர் பக்கத்தில் இறந்த மாணவிக்கு நீதி வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த பிரச்சனையை தைரியமாக பேசிய ஒரே தமிழ் நடிகை என்று நெட்டிசன்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement