தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பவராக அறிமுகமாகியவர் தான் ப்ரியா பவானி ஷங்கர். இவர் இதனைத் தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை என்ற விஜய் டிவி சீரியலில் நடித்து மக்களின் பேராதரவை பெற்ற இவர் அப்படியே சினிமா பக்கமும் வந்தார்.
இதன் படி மேயாத மான் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார்.
அடுத்தடுத்து அவரது கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.கடந்த டிசம்பர் மாதம் கடற்கரை பக்கத்தில் புதிய வீடு வாங்கியதாக அறிவித்த நடிகை இப்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளதாக வீடியோவுடன் பதிவு செய்துள்ளார்.
அதாவது அவர் சொந்தமாக புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றை தொடங்கியுள்ளாராம், விரைவில் திறக்க இருக்கிறாராம். தனது ரெஸ்டாரண்ட்டை வீடியோவாக எடுத்து வெளியிட அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!