• Sep 20 2024

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ப்ரியங்கா சோப்ரா

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் ஏரானமான ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ப்ரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து பாலிவூட்டில் தான் படவாய்ப்புக்கள் குவிந்தன.

இதனால் பாலிவூட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர். இதையடுத்து கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தார்.

இதனை அடுத்து கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மால்தி என்ற பெயர் சூட்டியுள்ளனர். இந்த குழந்தை சில மாதங்கள் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் இதை அவர் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடவில்லை. அதையடுத்து சில முறை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டாலும் முகத்தை மறைத்தே வெளியிடுவார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர் குழந்தையின் முகத்தை மறைத்தவாறு பூங்காவில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement