• Sep 20 2024

முதல் முத்தம்…முதல் காதல் பற்றி மனம் திறந்த நடிகை ரம்யா பாண்டியன்.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். 

எனினும் இதனை தொடர்ந்து மம்முட்டிக்கு ஜோடியாக ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தில் நடித்ததன் மூலம்  ரம்யா பாண்டியன் மலையாள சினிமாவில் ஹீரோயினியாக  அறிமுகமாகியுள்ளார்.



மலையாளத்தில் இந்த திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அத்தோடு தமிழில்  நேற்று தான் வெளியானது. இப் படத்தைப் பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். எனவே படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


 அந்த வகையில், படத்திற்கான ப்ரோமோஷனுக்காக பேட்டியொன்றில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியனிடம் தொகுப்பாளர் பல கேள்விகள் கேட்டுள்ளனர். எனினும் அப்போது தொகுப்பாளர் அவரிடம் ”  நடிகைகளிடம் சில பேட்டிகளில் உங்களுடைய முதல் முத்தம் முதல் காதல் பற்றி கேட்கிறார்கள் அந்த மாதிரி கேள்விகள் உங்களிடம் கேட்டால் என்ன செய்வீர்கள் ..? என்று கேட்டுள்ளனர்.


அதற்கு பதில் அளித்த ரம்யா பாண்டியன்  "எனக்கு அந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்றால் நானே பதில் அளிப்பேன் இல்லையென்றால் தேவையில்லாத கேள்வி என்று தோன்றுகிறது என்றால் பதிலளிக்க மாட்டேன். கோபமெல்லாம் படவே மாட்டேன்  " என்று கூறியுள்ளார்.



Advertisement

Advertisement