கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பேமஸ் ஆனார். இதையடுத்து சுல்தான் படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த அவர், பின்னர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது ராஷ்மிகா கைவசம் தெலுங்கில் புஷ்பா 2 திரைப்படம் உள்ளது. அதேபோல் தமிழில் ரெயின்போ என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர இந்தியில் அனிமல் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் ராஷ்மிகா. இப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. இப்படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி உள்ளார். இப்படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் பாலிவுட் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நடிகர் டைகர் ஷெராப் உடன் இணைந்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார் ராஷ்மிகா. அப்போது தொகுப்பாளர், நீங்க நரூட்டோவை ரகசிய திருமணம் செஞ்சுகிட்டீங்களாமே என நடிகை ராஷ்மிகாவிடம் கேள்வி கேட்டார். இதற்கு நடிகை ராஷ்மிகாவும் ஆமாம் என சொன்னதோடு, என் இதயமே நரூட்டோவுக்கு தான், அந்த கதாபாத்திரத்தை முழுவதுமாக திருமணம் செய்துகொண்டேன் என கூறினார்.
நடிகை ராஷ்மிகா ரகசிய திருமணம் பற்றி பேசியதை கேட்டு அருகில் இருந்த நடிகர் டைகர் ஷெராப் ஷாக் ஆனார். உண்மையில், நரூட்டோ என்பது ஒரு கார்ட்டூன் கதாபாத்திரம் ஆகும். அதற்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் நடிகை ராஷ்மிகாவும் ஒருவர். அவர் நரூட்டோவின் தீவிர ரசிகை என்பதை பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் கூட நரூட்டோ பொம்மையை முத்தமிட்டவாரு, என்னுடைய லவ்வர் என கூறியிருந்தார்.
Listen News!