தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பல திரைப்படங்களை நடித்தவர் தான் நடிகை ரேகா.
தமிழில் இவரது வெற்றிப் படங்கள் என்றால் புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கடலோரக் கவிதைகள், குணா உள்ளிட்ட படங்களை கூறலாம்.
அத்தோடு துணை கதாபாத்திரங்களில் உத்தம புத்திரன், வில்லன், தசாவதாரம், தலைவா உள்ளிட்ட படங்கள் நடித்துள்ளார்.
தந்தை மீது அதிக பாசம் கொண்ட ரேகா இறந்த பின்னர் அவர் கூடவே இருக்க வேண்டுமென்பதற்காக தந்தை சமாதிக்கு அருகிலேயே அவருக்கும் சமாதி கட்டி பராமரித்து வருகிறாராம்.
உயிரோடு இருக்கும் போது ரேகா இப்படி செய்துவைத்துள்ள விஷயம் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!