• Sep 21 2024

மகனுக்கு கோடிக்கணக்கில் சொகுசு கார் பரிசளித்த நடிகை ரோஜா-மக்களிடத்தே எழுந்த கடும் விமர்சனம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் 90களில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரோஜா.இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார் இவரது முதல் படம் செம்பருத்தி ஆகும் .

மேலும் இப் படம் செம கிட் ஆனதால் அடுத்தடுத்து நிறைய படவாய்ப்புகள் இவரை வந்து சேர்ந்தது இவர் செம்பருத்தி திரைப்பட ஆர்கே செல்வமணி என்பவரைத் திருமணம் செய்துள்ளதோடு குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார்

படங்களில் பிஸியாக நடித்திருந்தாலும் ரோஜா அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். ஆந்திர மாநிலத்தில் முழுநேர அரசியல் வாதியாக கலக்கி வருகிறார்.

அவர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் சுற்றுலா துறை அமைச்சராக இருக்கிறார்.ரோஜாவுக்கு அன்ஷு மாலிகா என்ற மகளும், கௌஷிக் என்ற மகனும் இருக்கின்றனர். தற்போது ரோஜா தன் மகனுக்கு விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை பரிசளித்து இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் அந்த பென்ஸ் காரின் விலை ஒன்றரை கோடி ருபாய் என்றும் கூறப்படுகிறது. இதை பார்த்து ரோஜா மீது அதிக விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.

தான் பணக்காரி இல்லை என சொன்ன ரோஜா இப்போது எப்படி கோடிக்கணக்கில் கொடுத்து கார் வாங்கி கொடுக்கிறார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்அவர் அமைச்சர் ஆகிவிட்ட பின் அதிகம் சம்பாதிக்கிறார் போல என்றும் விமர்சனங்கள் வர தொடங்கி இருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement