தமிழ் சினிமாவில் பிரசாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ரோஜா. இவர் இப்படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருப்பதோடு 90களில் முக்கியமான நடிகையாகவும் வலம் வந்தார்.
நடிப்பில் பிஸியாக இருந்த தருணத்திலேயே இயக்குநர் செல்வமணியைத் திருமணம் செய்து கொண்தோடு நடிப்போடு அரசியலிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இந்த நிலையில் இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.மகள் அன்ஷுமாலிகா,திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தற்போது டோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் காட்டு தீ போல் பரவி வருகிறது
அதன்படி இவர் தற்போது, அமெரிக்காவில் உள்ள பிரபல திரைப்பட கல்லூரியில் நடிப்பு, இயக்கம், திரைக்கதை எழுதுதல், ஆகியவை பற்றி படித்து வருவதாகவும்... படிப்பை முடித்து இந்தியா திரும்பிய பின்னர் நடிப்பில் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.
நடிகை ரோஜா ஒரு நடிகை என்பதாலும், அவரது தந்தை செல்வமணி ஒரு இயக்குநர் என்பதாலும்... தன்னுடைய மகளுக்கு சீக்ரெட்டாக நடிப்பு பயிற்சியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொடுத்து வருவதாகவும், அதே போல் அவரது தந்தை செல்வமணியும், திரைக்கதை எழுதுதல், மற்றும் படம் இயக்குவது குறித்து கற்பித்து வருகிறாராம்.
ஏற்கனவே அன்ஷுமாலிகா எழுதிய 'தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்', என்கிற புத்தகம் 'ஜி டவுன் என்ற இதழில் வெளியானது. இந்த புத்தகத்திற்காக சமீபத்தில் தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை இவர் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!