• Sep 20 2024

நடிகை ரோஷினிக்கு கிடைத்த விருது…மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் TRP உச்சத்திற்கு செல்ல முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்த சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் உடைய கதாநாயகியாக தொலைக்காட்சியில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் குடி கொண்டவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இந்த தொடர் மூலம் இவருக்கு கிடைத்த ரசிகர்களின் எண்ணிக்கையோ எண்ணிலடங்காது.

பாரதி கண்ணம்மாவில் கிடைத்த பிரபலம் ரோஷினி அதனைத் தொடர்ந்து படங்களிலும் நடிப்பார் என ரசிகர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் அவரோ ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காதபடி சில மாதங்களுக்கு முன்பு அத்தொடரில் இருந்து தான் விலகுவதாக கூறியிருந்தார்.

அந்நிகழ்ச்சியில் இருந்து விலகிப் பின் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி-3' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் இறுதி போட்டியாளராக வருவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அதிலும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சி இருந்தது. அதாவது இவர் இறுதி போட்டியாளராக தேர்வாகவில்லை.

இதனால் வருத்தத்தில் இருந்த நடிகை ரோஷினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் விதமாக தற்போது ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. அதாவது நடிகை ரோஷினிக்கு She விருது கிடைத்துள்ளது. அந்த விருதை கையில் வைத்து அதனுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்து அப்புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் ரோஷினி. அதைப்பார்த்த ரசிகர்கள் நடிகை ரோஷினிக்கு வாழ்த்து மழையினைப் பொழிந்து வருகிறார்கள்.

இதோ ரோஷினி வெளியிட்ட அந்தப் புகைப்படம்,

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement