• Sep 21 2024

கண்ணீர் விட்டு அழுத நடிகை சதா. காரணம் என்ன தெரியுமா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை சதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்த சதா முதல் முதலில் ஜெயம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து  அப்படத்தின் தமிழ் ரீமேக்கிலும் ஜெயம் படத்தில் நடிகர் ஜெயம் ரவிகுகு  ஜோடியாக நடித்து தமிழ் மொழியில் நடிகையாக அறிமுகமானார்.


 தொடர்ந்து  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம்க்கு ஜோடியாக அந்நியன் திரைப்படத்தில்  நடித்தார்.  தமிழில் இறுதியாக  டார்ச் லைட் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சதா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.


அதில் , தேஜா படத்தில் ஒரு மோசமான காட்சியில் நடித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். என் கன்னத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் நாவினால்  நக்குவது போன்ற அருவருப்பான  காட்சி ஒன்று இடம்பெற்று இருந்தது.இது போன்ற காட்சியில் நடிக்கமாட்டேன் என்று இயக்குனரிடம் சொன்னேன் ஆனால் படத்தில் அந்த காட்சி தேவை என சொல்லி  படமாக்கி விட்டார். அந்த காட்சியை எடுத்த பின் வீட்டுக்கு சென்று இன்று வரை அந்த படத்தில் ஏன் நடித்தேனோ? என வருத்தப்பட்டு வருகிறேன் என  கூறியுள்ளார்.

Advertisement

Advertisement