• Sep 20 2024

குடும்பத்துடன் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்ற நடிகை சாய் பல்லவி- அடடே ஹோம்லி லுக்கில் ஜொலிக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் தாம்தூம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் சாய்பல்லவி. இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிரேமம் திரைப்படடே இவரை பிரபல்யப்படுத்தியது.

இதில் மலர் ரீச்சர் என்னும் கதா்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருந்தார்.இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது தென்னிந்தியாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.


நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த லவ் ஸ்டோரி, நானி ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

சமீபத்தில் வெளியான விராத பர்வம் மற்றும் கார்கி திரைப்படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. சாய் பல்லவியின் நடிப்பு இந்த திரைப்படங்களில் முக்கிய அம்சமாக அமைந்தது.

சாய்பல்லவி அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தன்னுடைய குடும்பத்துடன் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய் பல்லவி பகிர்ந்துள்ளார்.


சிவப்பு நிற பட்டுப் புடவை அணிந்து மல்லிகைப்பூ சூடி சாய் பல்லவி பெரிய கோவில் விமானத்தை அண்ணாந்து பார்ப்பது போல புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்‌ என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement