தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருந்த சமந்தா தற்போது இந்தியளவிலும் பிரபலமாகியுள்ளார். இதனை அடுத்ததாக இந்தி வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை சமந்தாவிற்கு தேடி தரவில்லை. அத்தோடு படுமோசமான வசூல் தான் சாகுந்தலம் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சிட்டி பாபு சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இதில் 'விவாகரத்துக்கு பின் தனது வாழ்வாதாரத்திற்காக புஷ்பா படத்தில் நடனமாடினார் சமந்தா. ஸ்டார் ஹீரோயின் என்ற அந்தஸ்தை சமந்தா இழந்துவிட்டார்.மேலும் இனி மீண்டும் அந்த இடம் அவருக்கு கிடைக்காது'. யசோதா படம் வெளியான சமயத்தில் கண்ணீர் விட்டு சமந்தா புரொமோஷன் செய்தார்.
அதேயுக்தியை சாகுந்தலம் படத்திற்கும் கையாண்டார் எடுபடவில்லை. ஒவ்வொருமுறையும் சென்ட்டிமென்ட் கை கொடுக்காது. கதையும், கதாபாத்திரமும் நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் ரசிப்பார்கள். இத்தகைய மலிவான செயல்கள் எடுபடாது' என்று கூறியுள்ளார்.
Listen News!