திரையுலகில் உச்ச பிரபலங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை சமந்தா.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா.
இவ்வாறு இருக்கையில் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் சினிமா துறையில் நட்சத்திர ஜோடியாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் திடீரென கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர்.
அவர்கள் பிரிவதாக அறிவித்தாலும் அதற்கான காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை. அது பற்றி பல்வேறு வதந்திகளும் வலம் வர தொடங்கியது. இருப்பினும் இருவருமே விவகாரத்துக்கு காரணத்தை தற்போது வரை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் சமந்தா ஹிந்தியில் பிரபலமான காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றார். அத்தோடு அதன் ப்ரமோ தற்போது வெளிவந்திருக்கிறது. அப்போது அவர் விவாகரத்து பற்றியும் கூறியிருக்கிறார்
"திருமண வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாமல் போக காரணம்.. வாழ்க்கை K3G (கபி குஷி கபி கம்) படம் போல இருக்கும் என காட்டினார்கள், ஆனால் உண்மையில் அது கேஜிஎப் போல இருக்கிறது" என சமந்தா கூறி இருக்கிறார்.
அதனால் சமந்தா அவரது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து இருப்பதை பற்றி தான் இப்படி மறைமுகமாக பேசி இருக்கிறார் என தெரிகிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் படிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்தோடு சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் சகுந்தலம், யசோதா போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வருமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சீரியல் நடிகை ரச்சிதா..!
- கோபியை பற்றி தெரிந்து கொண்ட பாக்கியா- அதிரடி காட்சிகளுடன் வெளிவந்த ப்ரமோ..!
- உடலில் துணியே இல்லாமல் விஜய் தேவரகொண்டா…வைரலாகும் போஸ்டர்..!
- 44 வயதில் கம்பேக்கா-ரசிகரின் கேள்விக்கு நச் என பதிலளித்த நடிகை பூஜா
- நடிகை கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணமா? பெற்றோர் அளித்த பதில்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!