• Sep 20 2024

தூக்கமில்லாமல் தவித்த நடிகை சமந்தா-இது தான் காரணம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை சமந்தா.

இவருடைய சிரிப்பிலும், அழகிலும் மயங்காதவர் யாரும் இல்லை. அந்த அளவிற்கு கொள்ளையழகில் இளைஞர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டவர். இவர் படங்களில் நடித்தாலோ, விளம்பரங்கள், போட்டோ ஷூட் என எது செய்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வைரலாகி விடும்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் அக்டீவாக இருக்கும் சமந்தா ரசிகர்களின் கேள்விக்குப் பதில் அளித்தும் வருகின்றார்.

இந்நிலையில் தென்னிந்தியாவைத் தாண்டி பாலிவூட்டிலும் கால் பதித்துள்ள நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "சிலர் என்னைக் கேலி செய்கின்றனர். கடுமையான அவதூறு வார்த்தைகளால் பேசுகிறார்கள் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் "சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் நான் அதிக நேரம் செலவு செய்கின்றேன். எனக்கு ரசிகர்களோடு பேசுவது, அவர்களின் விருப்பங்களைத் தெரிந்து அதற்கு ஏற்ற மாதிரியான படங்களில் நடிப்பது பிடிக்கும். அந்த உணர்வே தனி அனுபவம். அதை நான் என்னுடைய வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனால் சிலர் என்னைக் கேலி செய்து வருகின்றனர். கடுமையான அவதூறு வார்த்தைகளால் பேசுகிறார்கள். அவர்களால் நான் எத்தனையோ இரவுகளைத் தூக்கமில்லாமல் கழித்தேன். நான் தவறு செய்யாத வரை எனக்கு எந்த வேதனையும் இல்லை. என்னை நேசிக்கும் ரசிகர்களுக்காக நான் என்றும் என்னுடைய பெஸ்ட் கொடுத்துக் கொண்டே இருப்பேன்" எனவும் அந்த பேட்டியில் சமந்தா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தாவின் இந்தப் பேச்சு ரசிகர்களின் மனதை உருகவைத்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement