தமிழ் சினிமாவில் 90களில் முக்கியமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சீதா.இவர் ஆண்பாவம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து ஆயிரம் பூக்கள் மலரட்டும், அவள் ஒரு பௌர்ணமி, துளசி கு,ரு சிஷ்யன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
தொடர்ந்து நடிகர் பார்த்தீபனைக் காதலித்து திருணம் செய்து கொண்ட இவர் சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார். பின்பு மீண்டும் குணச்சித்திரு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.அதன்படி காதல் அழிவதில்லை ,தாஸ் ,வியாபாரி, பரமசிவம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சீரியல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
சில ஆண்டுகளுக்கு முதல் தனது கணவரை விவாகரத்து செய்த இவர் சமூக வலைத்தளங்களிலிலும் ஆர்வம் காட்டி வருகின்றார் அந்த வகையில் தாய்வான் நாட்டுக்குச் சுற்றுலா சென்ற இவர் மிருகக்காட்சிச் சாலையில் சிம்பன்சியுடன் விளையாடும் வீடியோவைப் பதிவிட்டுள்ளதைக் காணலாம்.
Listen News!