• Sep 20 2024

நடிகை சினேகா வீட்டில் நடந்த மற்றுமோர் விஷேசம்-யார் யார் வந்துள்ளார்கள் தெரியுமா..?வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ,மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 



புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் தெரிந்ததே.இவர் 2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டார்.



இதன் பின்பு இரு வீட்டார் சம்மத்துடன் பிரம்மாண்டமாக சென்னையில் திருமணம் செய்து கொண்டு 2015 ஆண்டு ஆண்குழந்தை பெற்றதை அடுத்து ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.



இவ்வாற இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.



அந்த வகையில் தற்போது தனது வீட்டில் ஆயுத பூஜை விசேஷம் என கூறி தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.



அத்தோடு இந்த பூஜையில் நடிகை சரண்யா பொன்வண்ணன், நடிகை ப்ரீத்தா விஜயகுமார், அருண் விஜய்யின் மனைவி, மகன், மகள், நடிகர் ஜீவாவின் மனைவி, நடிகர் தனுஷின் அக்கா, நடிகை ரம்பா ஆகியோர் கலந்துகொடுள்ளார்கள்.



இவர்கள் மட்டுமின்றி சினேகா பிரசன்னாவின் நண்பர்களும் கலந்துகொண்டுள்ளனர்.


Advertisement

Advertisement