தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ரீதேவி. இவர் தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.இப்படத்தில் இவரக்கு கிடைத்த வரவேற்பானது இவரை முன்னணி நடிகையாக உயர்த்தியது.
இதனை அடுத்து ரஜினி,கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார்.இவர் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரைத் திருமணம் செய்திருந்தார்.இருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முதல் மாரடைப்பால் இறந்தார்.
இந்த நிலையில் இவர் குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.அதாவது ஸ்ரீதேவி முதலில் ஹிந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி என்பவரைத்தான் உருகி உருகி காதலித்தாராம். இருவரும் சேர்ந்து படங்களில் நடித்ததன் மூலம் காதலர்களாக மாறியிருக்கின்றனர். மூன்று வருடம் இருவரும் லிவிங் ரிலேஷன்சிப்பில் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்கெனவே திருமணமாகி இருந்ததாம். இதனால் ஸ்ரீதேவி அவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு தன்னுடன் வருமாறு கூறினாராம். ஆனால் மிதுன் சக்கரவர்த்தியோ ஸ்ரீதேவியை இரண்டாவது மனைவியாக சேர்த்துக் கொள்ள தயாராக இருந்தாரே தவிர முதல் மனைவியை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லையாம்.
இதன் காரணமாகத்தான் ஸ்ரீதேவி மிதுன் சக்கரவர்த்தியை விட்டு பிரிந்தாராம். ஆனால் அதன் வலி பல காலம் ஸ்ரீதேவிக்கு இருந்ததாக சொல்லப்படுகின்றது.
Listen News!