• Sep 20 2024

பத்திரிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்த நடிகை டாப்ஸி-திரையுலகில் பெரும் பரபரப்பு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் உள்ள பெண் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை டாப்ஸி. இவர் நடிகை மட்டுமன்றி சிறந்த மாடலும் கூட. அதாவது 2008-ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கு பற்றி அதில் பட்டத்தையும் வென்றார். அத்தோடு அதே போட்டியில் ‘ஃபெமினா, ஃபிரெஷ், ஃபேஸ்’ உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றிருக்கின்றார்.

டாப்ஸி திரையுலகினுள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு சுமார் ஆறு மாதங்கள் மென்பொருள் பொறியாளராக பணியாற்றினார்.

அதனைத் தொடர்ந்து ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழில் மட்டுமன்றி ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்திருக்கின்றார். மற்ற நடிகைகளைப் போல் அல்லாது இவர் வித்தியாசமான கதை அம்சங்கள் நிறைந்த படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவது வழமை.

இவ்வாறுஇருக்கையில் பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த சபாஷ் மிது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

தற்போது அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகும் டோபாரோ என்ற படத்தில் நடித்துள்ளார்.மேலும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாகிறது. இது சம்மந்தமான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை டாப்ஸி கலந்துகொண்டார். அப்போது அவரை புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க சொன்ன பத்திரிக்கையாளர் ஒருவருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.

அப்போது டாப்ஸி “நான் என் வேலையை ஒழுங்காக செய்கிறேன். கேமரா என்னை நோக்கி இருப்பதால் நான் சொல்வது மட்டும் தெரியும். கேமரா உங்கள் பக்கம் திரும்பினால் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதும் தெரியும்.

அத்தோடு நீங்கள் மரியாதையாக பேசினால் நானும் மரியாதையாக பேசுவேன்” என கோபத்தை வெளிப்படுத்தி பேசினார். இந்த சம்பவமானது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement