தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் த்ரிஷா. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்திருக்கின்றார். அத்தோடு இதுவரை 50க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.
சிறந்த கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் த்ரிஷா எப்போதுமே முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். அந்த வகையில் இவர் ஏற்று நடித்த ஜெசி ஜானு ஆகிய கதாப்பாத்திரங்கள் இன்னும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இவர் தற்பொழுது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப்டெம்பர் மாதம் 30ம் திகதி வெளியாகவுள்ளது என்பதும் முக்கியமாகும்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கம் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார்.அந்த வகையில் தற்பொழுது மஞ்சள் நிற சல்வாரில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!