சினிமாவில் அறிமுகமாகி கடந்த 20 வருடங்களாய் முன்னணியில் இருப்பவர் நடிகை த்ரிஷா.
‘லேசா லேசா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும், த்ரிஷா நடித்து முதலில் வெளிவந்த படம் ‘மௌனம் பேசியதே’. அதற்குப் பின்னர் பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தெலுங்கிலும் முக்கியமான முன்னணி கதாநாயகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தமிழில் விக்ரமுடன் நடித்த ‘சாமி’ படம்தான் அவருக்குப் பெரிய திருப்புமுனையைத் தந்தது. அதன்பின் விஜய்யுடன் நடித்த ‘கில்லி’ அவரை உச்சத்தில் கொண்டு போய் வைத்தது என்று தான் கூற வேண்டும்.தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். நாயகிக்கு முக்கியத்தும் வாய்ந்த ‘அபியும் நானும்’ படமும் அவருடைய நடிப்பைப் பற்றிப் பேச வைத்தது.
இவ்வாறு இருக்கையில் பல்வேறு மொழிப் படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் விரைவில் அரசியலில் இறங்கி ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள திரிஷாவிடம் தேசிய கட்சி ஒன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் இவர் அரசியலில் இல்லை எனவும் சொல்லப்படுகின்றன.
ஆனால் இவர் பாஜகவில் இணைகிறாரா அல்லது காங்கிரசில் இணைகிறாரா என இன்னும் தெரியவரவில்லை. விரைவில் இது பற்றியும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!