• Sep 20 2024

புதிய காதலனிடம் என்னை கல்யாணம் பண்ணிப்பியா என மண்டியிட்டு கெஞ்சிய நடிகை- கடுப்பாகிய ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ராக்கி சாவந்த் தனது புதிய காதலன் ஆதிலுக்கு கையில் பூங்கொத்துடன் மண்டியிட்டு ஐ லவ் யூ என்று ப்ரபோஸ் செய்துள்ளார்

பாலிவூட் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராக்கி சாவந்த், இவர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 14 மற்றும் சமீபத்தில் முடிந்த சீசன் 15 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கின்றார்.


இது தவிர தமிழில்  சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஐட்டம் பாடல்களுக்கும் நடனம் ஆடி இருக்கின்றார்.இவர் கடந்த ஆண்டு ரித்தேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாகவும் தனக்கு அற்புதமான கணவர் கிடைத்து இருப்பதாகவும் மிகவும் பெருமையுடன் கூறியிருந்தார்.

 இதையடுத்து ரித்தேஷ் ஏற்கனவே திருமணமான செய்தியை மறைத்து இரண்டாவதாக தன்னை திருமணம் செய்து கூறி காதலர் தினத்தன்று தனது கணவரை விட்டு பிரிந்தார்.


இதனைத் தொடர்ந்து ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாகவும், தனது கடந்த காலத்தைப் பற்றி எதையும் மறைக்காமல் அவரிடம் கூறிவிட்டேன். ஆதிலும், அவரது குடும்பத்தினரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். ஆதில் கான் தனக்கு பிஎம்டபிள்யூ காரையும், துபாயில் தனது பெயரில் ஒரு வீட்டை வாங்கி உள்ளார். 


கார் மற்றும் வீட்டை விட அவரின் அன்பை தான் அதிகம் மதிக்கிறேன் என கூறியிருந்தார்.இந்நிலையில், நடிகை ராக்கி சாவந்த்திற்கு காதல் தலைக்கு ஏறிப்போய், புது காதலன் ஆதிலுக்கு கையில் பூங்கொத்துடன் மண்டியிட்டு ஐ லவ் யூ ஆதில்...என்னை கல்யாணம் பண்ணிப்பீயா என கேட்க, புது காதலன் ஆதில், அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தனது அன்பையும் வெளிப்படுத்தி உள்ளார். 

இது இணையத்தில் வெளியாகி இளசுகளை சூடாக்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement