தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் நடிகையாக மட்டுமல்லாது பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் விளங்கி வருகின்றார். ஆரம்பத்தில் பாடகியாக விளங்கிய இவர் தமிழில் 'ஏழாம் அறிவு' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து '3, வீரம், லாபம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
ஸ்ருதி ஹாசன் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார்.மேலும் இவர் தற்போது பிரபாஸ், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்டோரின் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பிற்கும், காந்தக் குரலிற்கும் மயங்கி ஏராளமான ரசிகர் கூட்டம் இவருக்கு உண்டு.
இந்நிலையில் சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டி ஒன்று பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. அதாவது “சினிமா துறையில் ஆணாதிக்கம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் "சினிமா துறையில் ஆணாதிக்கம்தான் அதிகமாக உள்ளது. குறிப்பாக தமிழ் பெண்கள் சினிமா துறைக்கு வர தயங்குவதாக சொல்வது பற்றியும் யோசிக்க வேண்டும்" எனக் கூறியிருக்கின்றார்.
இவர் இவ்வாறு கூறியுள்ளமை திரையுலகிலும் பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி "சினிமா வியாபாரத்திற்காக நடிகைகள் பயன்படுத்தப்படுகிறார்கள்" என்று இவர் கூறியுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
அதாவது "இந்திய சினிமாவை பொறுத்தவரை கதாநாயகர்களை மையப்படுத்தியே கதைகள் உருவாகிறது. அப்படிப்பட்ட படங்களில் சினிமா வியாபாரத்திற்காக மட்டுமே கதாநாயகிகளை பயன்படுத்துகிறார்கள். இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் தற்போது தான் இந்த நிலை மாறி, கதாநாயகர்களுக்கு நிகரான படங்கள் கதாநாயகிகளுக்கும் வருகிறது" என தன்னுடைய தனிப்பட்ட கருத்தினை முன்வைத்திருக்கின்றார்.
இவர் இவ்வாறு கூறியுள்ளமை தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி ஒரு பிரபல நடிகையே இப்படிக் கூறுகின்றார் என்றால் சாதாரணமான அறிமுக நடிகைகளிற்கு எப்படி திரையுலகில் முன்னுரிமை கிடைக்கும் எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Listen News!