தமிழ் சினிமாவில் தற்பொழுது ட்ரெண்டிங் இயக்குநராக இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் நடிகர் விஜய்யை வைத்து லியோ என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. இதில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் நடிக்கிறார். மிகவும் சர்ச்சையான நடிகராக பார்க்கப்படும் இவர் சமீபத்தில் 300 நடிகைகளுடன் உறவில் இருந்ததாக அவரை கூறியிருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில் அவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் ஹீரோக்கள் பெரிய நடிகர்களாக வேண்டுமென்றால் அவர்கள் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் சண்டைக் காட்சிகளிலும் சில சமயங்களில் விபத்து ஏற்படும். அவர்களுடைய கடின உழைப்பின் காரணமாக மட்டுமே தான் மேலே வர முடியும்.
ஆனால் நடிகைகளை பொருத்தவரையில் எதுவுமே தேவை இல்லை. தாராள கவர்ச்சி காட்டினாலே பட வாய்ப்பு குவிந்து விடும். அத்தோடு மட்டுமல்லாமல் பெரிய ஹீரோக்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால் அவர்களே நடிகைகளுக்கு பெரிய படத்தில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறார்கள்.
இதனால் ஹீரோக்கள் போல அவர்கள் எந்த கஷ்டமும் பட தேவை இல்லை என சஞ்சய் தத் கூறி இருக்கிறார். இதை 1993 ஆம் ஆண்டு பிரபல இதழ் ஒன்றுக்கு சஞ்சய் பேட்டி கொடுக்கும் போது கூறி இருக்கிறார். ஆனாலும் நடிகைகளை பற்றி இவர் இவ்வாறு மோசமாக பேசியது இப்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்து இருக்கிறது.
Listen News!