• Sep 20 2024

சினிமா வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் நடிகைகள்: பிரபல இயக்குநரின் பேச்சால் வெடிக்கும் சர்ச்சை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஹாலிவுட்டில் தொடங்கிய மீ டூ விவகாரம் பாலிவுட், டோலிவுட்டைத் தாண்டி, கோலிவுட் வரை பல அதிர்வலைகளை கிளப்பியது. மேலும் ட்விட்டரில் ட்ரெண்டான METOO ஹேஷ்டேக் மூலம் ஏராளமான நடிகைகள் திரையுலகில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி தகவல்கள் பகிர்ந்து இணையத்தில் பரபரப்பை கிளப்பினார்கள்.

இந்நிலையில் பிரபல இயக்குநர் ஒருவர் பட வாய்ப்புக்காக நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளது விசயம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.அத்தோடு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த தெலுங்கு இயக்குநர் கீதா கிருஷ்ணாவிடம் திரையுலகில் நீங்கள் அறிமுகமான பின்பு நடந்த மாற்றங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

எனினும் இதற்கு பதிலளித்த கிருஷ்ணா, தெலுங்கில் நிறைய நடிகைகள் குறுகிய காலத்திலேயே முன்னணி இடத்தை பிடிப்பதற்காக படுக்கையை பகிர கூட தயாராக இருக்கிறார்கள். மேலும் நடிகைகள் இதுபோன்று படுக்கையை பகிர்வது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வருகின்றது. இதற்கெதிராக ஸ்ரீ ரெட்டி போன்ற நடிகைகள் குரல் கொடுத்தனர்.

நிறைய நடிகைகள் சினிமாவில் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக கூறி வருகின்றனர். எனினும் குறிப்பாக தெலுங்கு திரையுலகில் பல ஆண்டுகளாக இது நடந்து வருவதாகவும் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு திரையுலகில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

தெலுங்கு திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இயக்குநர் ஒருவர் இவ்வாறு பேசியுள்ளது சமூகவலைத்தளத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கிருஷ்ணாவின் இந்த பேச்சுக்கெதிராக சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

https://www.youtube.com/embed/NrGhWG5Emwc


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement