தமிழ் சினிமா நடிகர், தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க உறுப்பினர் என பன்முகம் கொண்ட கலைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். இவர் திரையுலகம் சார்ந்த அமைப்புக்களில் மட்டுமன்றி தமிழக அரசியலிலும் முக்கிய பங்களித்து வருகின்றார்.
'செல்லமே' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்களில் நடித்து வந்தார். இத்திரைப்படங்கள் வெற்றிப் படமாக மாறி இவருக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தன. இத்திரைப்படங்கள் கொடுத்த வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார்.
அதுமட்டுமல்லாது 2018-ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் நாம் ஒருவர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். அத்தோடு 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு நடிகர் சங்கத் தயாரிப்பாளர் பதவிக்கு போட்டியிட்டு அதில் யாரும் எதிர்பார்க்க வண்ணம் வெற்றியும் பெற்றிருக்கின்றார்.
இவ்வாறு எல்லா விதத்திலும் திறமையான ஒருவரான நடிகர் விஷால், நடிகை ஒருவருக்கு செய்த உதவி பற்றி பலராலும் பேசப்பட்டு வருகின்றது. அதாவது தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவரும், வளர்ந்த பின் மலையாள மற்றும் கன்னட மொழிகளில் நடித்து வருபவருமான நடிகை சர்மிளாவிற்கே உதவி புரிந்துள்ளார்.
நடிகை சர்மிளா நடிகர் கிஷோர் சத்யா என்பவரை திருமணம் செய்து பின்னர் அவரைப் பிரிந்து தற்போது ராஜேஷ் என்கிற எஞ்சினியரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. எனினும் சர்மிளா ராஜேஷையும் பிரிந்து அவரது மகனுடன் மட்டுமே வசித்து வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் நடிகை சர்மிளா குறிப்பிடுகையில் "நடிகர் விஷால் தான் என் மகனுக்காக கடந்த 6 ஆண்டுகளாக ஸ்கூல் ஃபீஸ் கட்டி வருகின்றார். ஒரு நடிகை யாரிடமாவது 2000 ரூபா கடன் வாங்கி விட்டு ஒரு வாரம் கழித்து கொடுக்கவில்லை என்றால் அந்த ஆண் உடனே போன் செய்து வெளியே போகலாமா என்று கேட்பார்கள். ஆனால் விஷால் அப்படி இல்லை, போன் பண்ண மாட்டார். உங்களையும், மகனையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் கவலைப்படாதீர்கள் என்று மெசேஜ் மட்டுமே அனுப்புவார், என் மகனைப் போல பலருக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுகிறார்" என்றார்.
நடிகர்கள் மனதிலும் கடவுள் வாழுகின்றார் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடிகர் விஷால் மாறியிருக்கின்றார். இத்தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் விஷால் ரசிகர்களினால் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
பிற செய்திகள்
- 10 ரூபா சம்பளத்துக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை துலைத்த பிரபல நடிகை-நடந்தது என்ன..?
- நடிகர் நாசர் வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்-இப்படியா நடிக்கனும்..!
- ஆத்தங்கரை மரமே பாடலில் வந்த பேச்சியம்மாவா இது….அடடடே..எப்படி இருக்கிறாங்க தெரியுமா; இதோ புகைப்படம்..!
- அடடே குன்னூரில் இவ்வளவு பெரிய பங்களா சாத்தியராஜ்ஜுக்கு இருக்கா?….வெளியான புகைப்படம்
- கோபத்தோடு ஈஸ்வரி எடுத்த முடிவு- கோபிக்கு காத்திருக்கும் பெரிய சிக்கல் – இன்றைய எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!