தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் ஒரு நடிகையாக மாறி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நஷ்ரியா நசீம். இவர் தனது சிறுவயதில் மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.
மலையாளத்தில் மட்டுமல்லாது தொடர்ந்து 'ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்காஹ்' எனப் பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். மலையாளம், தமிழ் எனப் பிஸியாக நடித்து வந்த நடிகை நஷ்ரியா மலையாள நடிகரான பஹத் பாசில் என்பவரை 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 8 வருடங்களிற்குப் பின்னர் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் முகம் காட்டத் தொடங்கியிருக்கின்றார். அதாவது தெலுங்கு நடிகரான நானி மற்றும் நஷ்ரியா நடிப்பில் தற்போது 'அடடே சுந்தரா' என்ற படம் வெளியாகியுள்ளது. அத்தோடு தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் டப் செய்யப்பட்டுள்ளது.
'அடடே சுந்தரா' என்ற இந்த திரைப்படம் ஆனது காதல் மற்றும் நகைச்சுவை பாணியிலான கதைக்களத்தை உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றது. சிறந்த நகைச்சுவைத் திரைப்படமாக இந்தப் படம் அமையும் என நானி தனது பேஸ்புக் பக்கத்தில் ஆரம்பத்திலேயே பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தெலுங்கில் 'அண்டி சுந்தரானிகி' எனவும், மலையாளத்தில் 'ஆஹா சுந்தரா' எனவும் இப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது.
இப்படம் ஆனது கடந்த 10-ஆம் திகதி வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கின்றது. இந்த நிலையில் 'அடடே சுந்தரா' என்ற இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் ஜூலை 10-ஆம் திகதி இப்படம் வெளியாகிறது என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!