• Sep 20 2024

திருமணம் முடிந்த கையோடு மனிதாபிமான செயல்களில் ஈடுபட்டு வரும் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி- குவியும் பாராட்டுகள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா துறையில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக நடிகர், நடிகைகள் பலர் உள்ளனர். அந்த வரிசையில் தற்பொழுது நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் "யாகாவாராயினும் நா காக்க" என்ற படத்தில் இணைந்து நடித்தனர்.

இதனைத் தொடர்ந்து மரகத நாணயம் என்னும் திரைப்படத்திலும் இணைந்து நடித்தனர். இப்படத்தைத் தொடர்ந்து இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த மே 18 ஆம் திகதி நட்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அத்தோடு இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் முடிந்த கையோடு தமிழகம் முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு உணவளித்து பசியாற்றி உள்ளனர். அவர்களின் இந்த மனிதநேயமிக்க செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement