தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து பல கோடி மக்களின் மனங்களை வென்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நகைச்சுவை கலந்த பேச்சிற்கும், திறமையான நடிப்பிற்கும் மயங்காதவர்கள் இல்லை என்று கூறலாம்.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அஜித், விஜய்க்கு அடுத்த படியாக மார்க்கெட்டில் அதிக வசூல் சாதனையை படைத்து வருபவர் என்றால் அது நம்ம சிவகார்த்திகேயன் தான்.
அந்தவகையில் டாக்டர், டான் என தொடர்ந்து ரூ. 100 கோடி வசூல் செய்த இரண்டு படங்களை கொடுத்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது சமீபத்தில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் கூட சில நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றாலும், தயாரிப்பாளருக்கு அப்படம் பல கோடி லாபத்தை அள்ளி கொடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் 'மாவீரன்'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கின்றார். சிவகார்திகேயனைப் போலவே அதிதி சங்கரும் சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்திற்குள் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து இருக்கின்றார்.
இந்நிலையில் இப்படத்தின் உடைய படப்பிடிப்பானது நிறுத்தப்பட்டுள்ளதாக சமீபகாலமாக கூறி வருகின்றனர். ஆனால் அவை யாவும் பொய் வதந்திகள் என்பதை நிரூபிக்கும் வகையில் அதிதி சங்கர் தற்போது ஒரு விடயத்தினை செய்திருக்கின்றார்.
அதாவது அப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுத்த புகைப்படம் ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தின் மூலமாக அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதிதி சங்கரின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
Listen News!