• Sep 20 2024

ஜவானில் நானும் அட்லீயும் கனெக்ட் ஆகினோம்.. ஆனா இனி அவருடன் நோ டீல்! ஏமாற்றத்தில் சீக்ரெட்டை உடைத்த புலி மணி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை ப்ரியாமணி . 

இதை தொடர்ந்து இவர் சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பருத்தி வீரன் திரைப்படம் தான். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதினையும் பெற்றார்.

மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார். இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதே 2017ம் ஆண்டு முஸ்தப்பா ராஜ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் சில காலம் சரியான படவாய்ப்புகள் அமையாமல் தவித்து வந்தார்.


அண்மையில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் நடித்து இருந்தார். மேலும் வெப் சீரியல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். 

இந்த நிலையில், ஜவான் பட இயக்குநர் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை ப்ரியாமணி பேட்டி ஒன்றில் கூறி, அது பற்றிய சீக்ரெட் தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், 


ஜவான் படத்தின் கதை சொல்ல வந்த போதே நானும் அட்லீயும் கனெக்ட் ஆகிட்டோம். அவர் என்னை புலி மணி என்று தான் கிண்டலடிப்பார். செட்டில் எங்கள் மீது மிகுந்த அக்கறை எடுப்பார். அன்பான மனிதன். ஜவானுக்கு இவ்வளவு வரவேற்பும் அங்கீகாரமும் கிடைத்ததில் மகிழ்ச்சி.

அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டியில், அட்லீ மீது அதிருப்தியில் இருப்பதாக கூறிய ப்ரியாமணி,  ஜவானில் விஜய் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் எனக்கும் அவருக்கும் காம்பினேஷன் காட்சி இருப்பதாகவும் கூறினார். ஆனால் கடைசியில் அது நடக்கவே இல்லை. இதனால் தான் மிகவும் அப்செட் ஆனதாக கூறியுள்ளார்.

அத்துடன், அட்லீயோடு அடுத்து பணியாற்றும் ஐடியாவில் தற்போது இல்லை என்றும் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement