விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி.இந்த நிகழ்ச்சியில் இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்பொழுது 4 வது சீசன் ஆரம்பித்துள்ளது. கடந்த வாரம் ஐயப்பன் எலிமினேட் ஆகி வெளியேறினார்.
இது மட்டுமல்லாமல் மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்த வந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக கலந்து கொண்டு கலக்கி வருகின்றார். அந்த வகையில் சிவாங்கியும் புகழும் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தனர்.
அப்போது ஷிவாங்கியிடம் புகழுக்கு நீங்க சமையல் பற்றி அட்வைஸ்ட் பண்ணனும் என்றால் என்ன பண்ணுவீங்க என்று கேட்ட போது ஷிவாங்கி. புகழ் அண்ணா ஏற்கனவே குக் தான் ஷோவுக்காக கோமாளியாக இருக்கின்றார் எனக் கூறினார்.
இதனை அடுத்து தொடர்ந்து பேசிய புகழ் கோமாளி என்பது சாதாரண விஷயம் கிடையாது. மற்றவங்களை சிரிக்க வைக்கிற முக்கிய விடயம் . வீட்டில நம்ம கோமாளித்தனத்தை பார்த்து யாராவது சிரிச்சாலே சந்தோஷமாக இருக்கும் அதுவும் இப்படியொரு தொலைக்காட்சி நிகழ்வில் எங்களால் மற்றவர்களை சிரிக்க வைக்க முடியும் என்றால் அதுவும் சந்தோஷம் தான் என்றும் கூறியுள்ளார்.
Listen News!