தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோகளில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். அதுமட்டுமன்றி ரசிகர்களால் 'தல' என செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றார். தமிழ் சினிமாவில் உள்நுழைந்து 60 படங்களை வெற்றிகராமாக முடித்திருக்கின்றார் நம்ம தல. அத்தோடு இவர் நடிப்பில் தற்போது 'ஏகே 61' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.
பொதுவாக சினிமா நடிகர், நடிகைகளை பொறுத்தவரைக்கும் படங்களில் எவ்வளவு பிஸியாக இருக்கின்றார்களோ அந்தளவிற்கு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருவார்கள். ஆனால் நடிகர் அஜித் எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
“Protect your ears”
Unconditional love always - Ajith pic.twitter.com/qd543owHDt
அதுமட்டுமல்லாது தனது தரப்பில் இருந்து முக்கிய அறிவிப்புக்கள் எத்தனையாவது வெளியிட வேண்டும் என்றாலும் பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து தான் தெரிவிப்பார் தல அஜித்.
அந்த வகையில் தற்போது நம்ம அஜித் தனது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் அக்கறையுடன் அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார். அதாவது ஒன்று அல்லது இரண்டு காதுகளிலும் ஒலிக்கும் சத்தம் நிலையானதாக இருக்கலாம். அல்லது வந்து போகலாம், இப்படி காதில் ஒலிக்கும் ஒரு வித ஒலி பெரும்பாலும் காது கேளாமையுடன் தொடர்புடையது.
காதுகளில் சத்தம் ஒலிப்பது அடிப்படை நோய் காரணமாக இல்லாத காரணங்களைக் கூடகொண்டிருக்கலாம். அதீத சத்தத்தை கேட்பது, தலையில் காயங்கள் ஏற்படுவது, அதிக அளவில் காதில் அழுக்கு இருப்பது, மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவை என சில பொதுவான காரணங்களை குறிப்பிட்டு, "உங்கள் காதுகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் - நிபந்தனையற்ற அன்புடன் அஜித்" என கூறியுள்ளார்.
இந்நிலையில் சுரேஷ் சந்திராவின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!